அண்மைக்காலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடிகிறது.
ஒரு நாள் சேவையினூடாக அதிகபட்சமாக 2,500 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.