Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L மாணவி விவகாரம்: ஆசிரியர் பணி இடைநிறுத்தம்

O/L மாணவி விவகாரம்: ஆசிரியர் பணி இடைநிறுத்தம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர் ஆசிரியர் பணியிலிருந்து உடனடியாக அமுல்படுத்தும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25ஆம் திகதி அநுராதபுரம் ஹிதோகம பாடசாலையின் பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் கண்காணிப்பாளரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles