கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.
கொவிட் பரவல் காரணமாக ஐந்து மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி ஆரம்பமானது.
இவ்வருடம் 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 3842 பரீட்சை நிலையங்களிலும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் பரீட்சை நடாத்தப்பட்டது.