அரசாங்கத்தினால் நேற்றைய தினம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்த வரித் திருத்தமானது மக்களுக்கு பாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.