சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இயக்கப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த அதன் தொழிற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக, உலை எண்ணெய், உற்பத்தி செய்யப்படுகிறது.
மசகு எண்ணெய் இன்மையால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.