8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா, கண்டி, கொழும்பு, களுத்துறை, கேகாலை, காலி, இரத்தினபுரி ,மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கட்டிட ஆய்வு மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை கோரியுள்ளது.