அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை தொடர்பான விசாரணைக்கு மேலும் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 5 பொலிஸ் குழுக்களும், சீஐடியும் விசாரணைகளை நடத்துகின்றன.
இது கொலை என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் சோதனை முடிவு கிடைக்கப்பெற்றதன் பின்னரே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதுவரையில் 20க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
எனினும், இன்னும் யாரும் கைதாகவோ, சந்தேகத்துடன் அடையாளம் காணப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.