3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இதனை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் நாளை (31) வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.
நாளை மறுதினம் முதல் எரிவாயு விநியோகிக்கப்படும்.
இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.