தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம் எப்படி சட்ட கட்டமைப்பிற்குள் தலையிட்டு தீர்வு காண்பது என்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெறவுள்ளது.