எதிர்வரும் சனிக்கிழமை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், கடந்த சில நாட்களாக எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளையும் விநியோகம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 7500 மெட்ரிக் டன் எரிவாயுவுடனான கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதுடன், முதலாவது கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
அதில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்டு, சனிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.