சிறுநீரக நோய் மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு அத்தியாவசியமான பல மருந்துகளுக்கு இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனால் தற்போது நோயாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும், வைத்தியசாலையில் பருத்தித் துண்டோ, ப்ளாஸ்டர் துண்டோ கிடைக்காத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட அரச மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பல மாதங்களுக்கு முன்னரே இந்த நிலைமை குறித்து அறிவித்திருந்தோம்.
அவர்கள் எவரும் சாதகமாக பதிலளிக்கவோ அல்லது அது தொடர்பில் அக்கறை கொள்ளவோ இல்லை என அவர் மேலும் தெரிவித்தா