கோட்டகோகமவில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைப்பதற்கு பிரதமரினால் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, pmoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது கருத்துக்களை அனுப்பும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
எதிர்காலத்தில், மிகவும் பயனுள்ள மற்றும் நடைமுறை திட்டங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் அல்லது குழுக்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படும்.