டபிள்யு. எம். மென்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தை இரண்டு அரச வங்கிகளில் அடமானம் வைத்து 700 கோடி ரூபாவை கடனாக பெற்றுக் கொண்டுள்ளதாக கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 மற்றும் 2019 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அவற்றின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை வங்கி அதன் தலைவர்களை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிற்கு நேற்று (24) அழைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த கூட்டத்தில் அதிக வசூலிக்காத கடன்களை பெற்றுள்ள பல நிறுவனங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எம். மெண்டிஸ் நிறுவனம் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இரண்டு வங்கிகளையும் கோப் குழுவிற்கு அழைத்து, இது தொடர்பில் அறிக்கை தயாரித்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.