எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை, 5,000 ரூபாவை தாண்டும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது விற்பனை செய்யப்படும் 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 4860 ரூபாவாக உள்ளது.
டொலரின் பெறுமதி மற்றும் உலகளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போதுள்ள விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.