குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) காலை CIDக்கு வருகை தந்தார்.
அவ்வேளையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






