Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதிக்கு அரசு முன்வைத்த நிபந்தனை

வாகன இறக்குமதிக்கு அரசு முன்வைத்த நிபந்தனை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனமொன்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து மாதாந்தம் 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும்.

ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

அத்துடன் சில வரிச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles