ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மாரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்தது.
மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மௌங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு குறித்த படகு சென்றதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.