எரிபொருளுக்கான விலை சூத்திரத்துக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.
எரிபொருள் இறக்குமதி, தரையிறக்குவதற்கான செலவு மற்றும் விநியோக செலவுகள், வரிகள் என்பன உள்ளடக்கப்பட்டு இந்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் இலாபம் சேர்க்கப்படவில்லை என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விலை சூத்திரம் 14 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 1 மாதத்துக்கு ஒருமுறை அமுலாக்கப்பட்டு விலைகள் சீராக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.