க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி மற்றும் பரீட்சை இடம்பெறும் தினங்களில் மாலை 6.30க்கு பின்னர் மின்துண்டிக்கப்படமாட்டாது என அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.