எரிபொருள் விநியோகஸ்தர்களை தவிர்த்து ஏனைய தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள், அவற்றை ஏனைய திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற வணிகங்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், இது தொடர்பில் முறைப்பாடு அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.