எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக, புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் நேற்று எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது.
இந்த செயலியில், எரிபொருள் நிலையங்களில் உள்ள எரிபொருட்களின் அளவு, எரிபொருள் கிடைக்கும் நேரம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.