இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கையிருப்பில் 15,000 அமெரிக்க டொலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்பு செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.