இன்று (19) நள்ளிரவு முதல் பாண் ராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.