நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியும், செஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
துமிந்த திஸாநாயக்கவுக்கு சொந்தமான 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களின் போது, இருவரது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.