நாட்டில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலவரத்தின்போது காயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலஹிட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
அவரது பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றதுடன், தலையிலும் மார்பு பகுதியிலும் ஏற்பட்ட உள்ளக காயங்களால் அவர் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.