Sunday, May 11, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L மாணவர்களுக்கான அறிவிப்பு

O/L மாணவர்களுக்கான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நேற்று (17) நள்ளிரவு முதல் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலை காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles