அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் கடமை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வன்முறைச் செயல்களை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த வன்முறை சம்பவங்களினால் 74 எம்.பி.க்களின் வீடுகள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட 71 எம்.பிகளுக்கு தலவத்துகொட பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.