பாகிஸ்தானின் கராச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், இந்தவெடிப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கடந்த 12 ஆம் திகதி பாகிஸ்தான் – சதார் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், 13 காயமடைந்தனர்.