பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை விரைவில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உறுதிப்படுத்தினார்.
10 சுயாதீன கட்சியின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று (16) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது, அமைச்சு பொறுப்புகளை ஏற்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க குறித்த கட்சிகள் இணக்கம் தெரிவித்தன.
புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.