எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்கவோ அல்லது குறை நிரப்பவோ வேண்டாம் என அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.
டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதுடன், அடுத்த வாரங்களில் 3 எரிபொருள் கப்பல்கள் இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளன.
அவற்றின் ஊடாக போதிய எரிபொருள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1190 எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகப் பணிகள் நிறைவடையும் வரையில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.