வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதற்காக 16 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து 84 பேர் ஏற்கனவே இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.