தலங்கம வெவ வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு நேற்று (10) பிற்பகல் ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் வீட்டிலிருந்த 2 நாய்கள், கோழிகள் மற்றும் மின்னுபகரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதியம் இரண்டு மணியளவில் இரண்டு குழுக்கள் வந்து அவ்வீட்டிற்கு தீவைத்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.