காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டா கோ கம போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டு வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்ட கோ கமவில் ஒலிபெருக்கி மூலம் பொலிசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இது குறித்த போராட்ட பிரதேசத்தை அகற்றுவதற்கான பொலிசாரின் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.