Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் மா அதிபர் - இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் – இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளை (11) காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்காமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் தவறியமைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles