Thursday, May 29, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

ஒரு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குசென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன், இவ்வருடம் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles