Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனை செலுத்த கால அவகாசம்

பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனை செலுத்த கால அவகாசம்

பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக் கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மே 2021 இல், மூன்று மாதங்களுக்குள் ‘ஸ்வாப்’ வசதியின் கீழ் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்பட்டது.

எவ்வாறாயினும், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல சந்தர்ப்பங்களில் பணம் செலுத்தும் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், வங்கியின் பணிப்பாளர்கள் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் விதிமுறைகளை மாற்றாமல் மேலும் கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் பேச்சாளர் செராஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles