காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அவர்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.