Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் ஹொரணை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர 16 வகை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதிப்பத்திரத்தினை சந்தேகநபர் கொண்டிருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 54 வயதுடைய நபர் கொஸ்ஹேன, போருவதண்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இங்கிரிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles