“நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டால் சபை ஒத்திவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவைத்தலைவரின் கட்டளைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்கியதன் காரணமாகவே அவர் இதனைத் தெரிவித்தார்.