பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டார்.
புதிய பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும், பிரதிவாதியான இம்தியாஸ் பாகீர் 65 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய எம்.பி.யின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா முன்மொழிந்துடன், இதற்கு டாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆதரித்தார்.
அத்துடன், ஆளுங்கட்சியின் ஆதரவும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
