Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு19ஆம் திருத்தச்சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டுமாம்

19ஆம் திருத்தச்சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டுமாம்

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கப்பட வேண்டும்.

அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்பட்டாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்படல் வேண்டும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles