அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கிறது.
அதன் காரணமாக அங்குப் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களையும் அவர்கள் அமைத்துள்ள முகாம்கள் மற்றும் பேருந்துகளையும் அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் மக்களுக்கு இடையூறு இல்லாத அமைதியான போராட்டத்துக்கு தடையில்லை எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.