எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதீடு இனி யதார்த்தமானது அல்ல எனவும், விரைவில் பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தா்ர.
அத்துடன் வருமான வரியை அதிகரிப்பது மிகவும் அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டார்.
“சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் சமூகம் சீரழிந்து விடும்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வருமான வரியை 15 சதவீதம் அதிகரிக்க நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.