நாட்டில் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் போது 20 தொடக்கம் 25 கிலோமீற்றர் தூரத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்தை மட்டும் செலுத்தி எந்த நேரத்திலும் எங்கும் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பஸ்களை நிறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.