இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம், நீர், தொடர்பாடல் கொடுப்பனவுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்கள் மற்றும் வாடகைகளை இடைநிறுத்துவதற்கும், உள்ளூர் நிதிகள் மூலம் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாக்களை நிறுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.