நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மக்களுக்கு அறிவிக்குமாறு கோரி அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும்இ செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்இ நாட்டில் பெறப்படும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கும்இ அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்வதற்குமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.