நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துமாறு அனைத்து அரச தலைவர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சகல பிரிவுகளின் தலைவர்களுக்கும் இதனை அறிவுறுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஊடாக தனிப்பட்ட அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.