லங்கா சதொச நிறுவனத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட அரிசி கையிருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் இந்த வாரம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் கையிருப்பு முடியும் வரை இது நடைமுறையில் இருக்கும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு நுகர்வோர் அதிகபட்சமாக ஐந்து (05) கிலோகிராம் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்இ அரிசி விற்கப்படும் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு அரிசி 1kg – 145.00
சம்பா அரிசி 1kg -175.00