மே மாத இறுதிக்குள் தற்போது நிலவி வரும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் Litro மற்றும் Laughs நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
உலக வங்கி எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக 90 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.
எதிர்காலத்தில், எரிவாயு விநியோகத்தில் நகர்ப்புறங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு வாடிக்கையாளர்களில் 25 சதவீதமானோர் நகர்புறங்களில் வசிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.