சிங்கப்பூரில் இருந்து வந்த எரிபொருள் தாங்கிய 2 கப்பல்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எனினும், எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கும் பணம் செலுத்தாவிட்டால் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு கப்பல்களுக்கும் டொலர் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், காலக்கெடு முடிவடைந்தால் நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.